districts

img

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல்

சிதம்பரம், பிப். 27- சிதம்பரம் அருகே வக்கிராமாரி கிராமத்தில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநி யோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் 1 கி.மீ தூரத்திலுள்ள செட்டிமேடு மற்றும் நாஞ்சலூர் கிராமப் பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் புகார் தெரிவித்தும்  நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இதனால் கோபமடைந்த கிராம மக்கள் காட்டுமன்னார்கோவில்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல்துறை அதி காரிகள் வட்டாட்சியர், நகராட்சி பொறி யாளர் உள்ளிட்டவர் சம்ப இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.