இருளர் மக்களுக்கு ரூ. 5 லட்சத்தில் தனி வீடுகள் ஒதுக்கிட வேண்டும், தாம்பரம் பகுதியில் வாழ்ந்து வரும் இருளர் மக்களுக்கு அரசு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்ட தலைவர் மா.அழகேசன், பொருளாளர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத்திடம் வழங்கினர்.