districts

img

சுண்ணாம்பு கால்வாய் மேடு பகுதி மக்கள் குடிமனை கேட்டு வட்டாட்சியரிடம் மனு

மதுராந்தகம், மே. 2- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் ஊராட்சி சுண்ணாம்பு  கால்வாய் மேடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 18 ஆண்டு களுக்கு மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில்  வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் வசித்து வரும் இடத்திற்கு குடிமனை பட்டா கேட்டு பலமுறை முறையிட்டும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக இதில் ஒரு சில நபர்களுக்கு மட்டும் குடிமனை பட்டா வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக நிலம் அளவீடு செய்யப்பட்டது. அந்த பணியை பாதியில் நிறுத்தப்பட்டது. குடிமனை பட்டா வழங்கப்படாததால் மின்சாரம் வழங்க மின்வாரியம் மறுத்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள்,  கர்ப்பிணி பெண்கள்,  மாற்றுத்திறனாளிகள், முதிய வர்கள்,  என அனைத்து தரப்பு மக்களும்  கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   மேலும் அரசின் எந்தவித நலத்திட்டங் களையும் பெற முடியாத நிலையில் உள்ள னர். மின்சாரம் இல்லாத காரணத்தால் இப்பகுதி இளைஞர்களுக்கு திருமணத் திற்கு கூட யாரும் பெண் தருவதில்லை என  கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து செவ்வாயன்று (மே 2) மதுராந்த கம் வட்டாட்சியரை சந்தித்து குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுக் களை வழங்கினர். மேலும் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி ஆர்.எல். குமரேசன் தலைமையில்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.வாசு தேவன், மதுராந்தகம் வட்டத் தலைவர் எம்.ஜெகநாதன், வட்டச் செயலாளர் எம்.எஸ். அர்ஜுன் குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.