districts

img

வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

சிதம்பரம், செப். 2- வீட்டுமனைப் பட்டா இல்லாத மக்களுக்கு  பட்டா வழங்கக் கோரியும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தியும் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம்,  பரங்கிப்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில்  மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் செல்லையா தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஜி.ரமேஷ் பாபு,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், மூத்த தலைவர் கற்பனைச் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.