2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க கோரி வியாழனன்று (செப்.5) நாடு முழுவதும் பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் தர்ணா நடைபெற்றது. இதனையொட்டி தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் சார்பில், சென்னையில் தர்ணா நடைபெற்றது. இதில், எஸ்.செல்லப்பா, எம்.ஸ்ரீதர் சுப்பிரமணியம் (பிஎஸ்என்எல்இயு), எஸ்.லிங்கமூர்த்தி (எப்என்டிஓ), பி.மோகன் (ஏஐபிஆர்பிஏ), எஸ்.மோகன்தாஸ், சி.கே.நரசிம்மன், வி.குப்பன், கே.கோவிந்தராஜ், ஆர்.ராஜசேகர் (ஏஐபிடிபிஏ), ஜி.சுப்பராயலு, கே.ஆர்.பழனிசாமி, எம்.சுப்பிரமணியன், (பிடிபிஏ), ஜி.இளவரசன், மொய்தீன்பிள்ளை, ஜி.வளனரசு (எஸ்என்பிடபிள்யூஏ) ஆகியோர் தலைமை தாங்கினார்.