வல்லூர் அனல் மின் நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மின் உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் செவ்வாயன்று (செப். 26) மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வடக்கு கிளைச் செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். கதிர்வேல் (உள்ளாட்சிஊழியர் சங்கம்), ரமேஷ் (கட்டுமானசங்கம்), ஜெயவேல்(சிபிஎம்), விநாயகமூர்த்தி (பொதுத் தொழிலாளர் சங்கம்), மின் ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை வடக்கு கிளை நிர்வாகிகள் மதனகோபால், சத்தியமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.