districts

பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கடலூர், அக்.13- கடலூர் தேவனாம்பட்டி னம் அரசு பெரியார் கலை கல்லூரியில் இருந்து பேருந்து நிலையத்திற்கு  சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்றாம் ஆண்டு படித்த மாணவன் தமிழ்ச்செல்வன் உயிரிழந்தான்.   மேலும், 5 மாணவர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.இதையடுத்து, வியாழக் கிழமை (அக்.12) அந்த கல்லூரிக்கு விடு முறை விடப்பட்டது. அக்.13 அன்று கல்லூரி வழக்கம் போல் திறக்கப்பட்டது. கல்லூரிக்கு வந்த மாணவர்கள், சக மாண வன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு கேட்டும், கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தியும் கல்லூரிக்கு எதிரே கடற்கரை சாலையில் மறி யல் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலு வலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு ஆகியோர் மாண வர்களுடன் பேச்சு நடத்தினர். அப்போது, கல்லூரி நேரத்தில் கூடு தலாக பேருந்துகள் இயக்கப் படும் என்றும், கூடுதலாக நிவாரணத் தொகை கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து, மாண வர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.