சென்னை, ஏப்.10- பணிவரன்முறை செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றி அறிவிக்க வலி யுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஏப்ரல் 21 அன்று சென்னையில் கவன ஈர்ப்பு பேரணியை நடத்து கின்றனர். டாஸ்மாக் தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் ஏப்ரல் 9 அன்று சென் னையில் சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் இரணியப்பன் (ஏஐசிசிடியு) தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமப்புற இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை உரு வாக்கும் வகையில் முந்தைய திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட னர். அரசியல் காழ்ப்புணர்ச்சி யால் அதிமுக அரசு அவர்களை பணிநீக்கம் செய்தது. தங்க ளுக்கு மீண்டும் பணி வழங்க வலி யுறுத்தி பல்வேறு கட்ட போராட் டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் தமி ழக முதலமைச்சர் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று அறி வித்துள்ளதற்கு இக்கூட்டுக்குழு வரவேற்பை தெரிவிக்கிறது. டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் 19 ஆண்டு காலமாக தொடர்ந்து பணி புரிந்து வரும் 26 ஆயிரம் ஊழி யர்களின் நீண்டகால கோரிக்கை களான பணி வரன்முறை, கால முறை ஊதியம் கோரிக்கை யினை நடப்பு சட்டமன்ற கூட் டத்தொடரில் முதலமைச்சர் நிறைவேற்றி அறிவித்திட வேண்டும்.
வெளிப்படையான பணியிட மாறுதலை அமல்படுத்துக!
திமுக அரசு பொறுப்பேற்ற வுடன் அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் அலுவலக சிபா ரிசுகள் பேரில் போடப்பட்டுள்ள பணியிட மாறுதல் ஆணை களை ரத்து செய்து, விற்பனை அடிப்படையில் சுழற்சி முறை பணியிடமாறுதல் கொள்கை யை உருவாக்கி வெளிப்படை யான பணியிட மாறுதலை அமல்படுத்த வேண்டும். டாஸ் மாக் கடைகளில் விற்பனை குறைவான கடைகளில் அதிக எண்ணிக்கையிலும், அதிகம் விற்பனையாகும் கடைகளில் குறைவான எண்ணிக்கையிலும் ஊழியர்கள் உள்ளதை கருத் தில் கொண்டு பணி நிரவல் செய்திட வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தவும், நேர்மை யான, வெளிப்படையான நிர்வா கத்தை நிலைநாட்டவும் டாஸ் மாக் நிறுவனத்திற்கென நிரந்தர அதிகாரிகளை நியமனம் செய் திட வேண்டும். டாஸ்மாக் கடை களின் விற்பனையை முறைப் படுத்திட கணினிமயப்படுத்தி “பார் கோடிங்” பில்லிங் முறை யை நடைமுறைப்படுத்த வேண் டும்.
ஊழியர்களை மிரட்டும் வெளிநபர்கள்
டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள நிரந்தர பணி யிடங்கள் இளநிலை உதவியா ளர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்க ளுக்கு கல்வித்தகுதி அடிப்படை யில் கடை ஊழியர்கள் நிய மனம் செய்திட வேண்டும். அர சின் இதர துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் மாற்றுப் பணி வழங்கிட வேண்டும். நீண்ட காலமாக பணி மறுக்கப்பட்டும், கிடங்குகளில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு உடனடியாக கடை பணி வழங்கப்பட வேண்டும். மதுக்கூட உரிமதாரர்கள் என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டும் வெளிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஏப்ரல் 21 ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டுக்குழு முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் நட வடிக்கைகளை ஏற்றுக்கொள் ளும் இதர சங்கங்களையும் கூட் டுக்குழுவில் இணைப்பது என் றும் முடிவு செய்யப்பட்டது.