districts

img

கே.வி.குப்பம் ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

வேலூர், ஜூலை 3 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் இ.சுகுமா ரன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் அப்துல்காதர், சுந்தரவேல், உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தனர். பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் சி.ரமேஷ்பாபு துவக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் ஜி.கோவிந்தராஜ், செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர்கள் எஸ்.டி.சங்கரி, கோபால.ராசேந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கோரிக்கைகள் அரசாணை எண் 52-ன் படி மாற்றுத் திறனாளி களுக்கு 100நாட்களுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும். வேலை வழங்காத நாட்களுக்கு பாதி கூலியை வழங்க வேண்டும். அரசு நிர்ண யித்த 4மணி நேர வேலை வழங்குவதோடு முழு கூலி யையும் வழங்க வேண்டும். 100 நாள் வேலைதாரர் களுக்கு வழங்கும் வெள்ளை அட்டையை கொடுப்பதை திரும்ப பெற்று அரசாணையில் உள்ளது போல நீலநிற வேலை அட்டையை வழங்க  வேண்டும். அரசாணையில் உள்ளது போல் மாதத்தின்  ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய் கிழமைகளில் 100நாள் வேலையில் பணி யாற்றும் மாற்றுதிறனாளி களுக்கு கேவி குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம்  நடத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன.  ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று நம்புராஜன் கூறியதால் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுதவல்லி, சதீஷ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக வந்து கோரிக்கைகளை கேட்டறிநதனர். பின்னர் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் தலைமையில் நிர்வாகிகள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று செயல்படுத்துவதாக சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.