districts

img

தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்

கடலூர், ஜன.1- புத்தாண்டை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக  டிசம்பர் 31 ஆம் தேதி இரவு தேவனாம்பட்டினத்தில் உள்ள வெள்ளி கடற்கரைக்கு பொதுமக்கள் வர காவல்துறை சார்பில் தடை விதித்திருந்தனர். பிறகு, ஜனவரி 1 ஆம் தேதி காலையில் காவல்துறையினர் தடையை விலக்கிக் கொண்டனர். இதையடுத்து, பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.  பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை நிறைவடையும் நிலையில் தங்களது பெற்றோருடன் குவிந்த மாணவர்கள் குதிரை மற்றும் ஒட்டக சவாரி செய்தனர். மேலும், ராட்டினங்களில் விளையாடி மகிழ்ந்தனர். வழக்கத்தை காட்டிலும் கடல் சீற்றம் சற்று அதிகமாக இருந்தது. இதனால், பொது மக்கள் கடலில் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.