திருவண்ணாமலை,நவ.30- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், விண்ணவனூர் ஊராட்சியில் 1600 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 7 தெருக்கள் உள்ளது. இதில் 5 தெருக்களை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சேரும், சகதியுமாக மிக மோசமாக உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, செங்கம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விண்ணவனூர் கிராமத்தில் உள்ள தெருக்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.