கிருஷ்ணகிரி,ஏப்.30- மழை இன்மை, கடுமையான வெயிலால் மலைகள், வனங்கள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிக்கடி யானைகள் நீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வருவதும் வழக்கமாக உள்ளது. ஆந்திர கர்நாடகா எல்லையில் மலைகள்,வனப்பகுதியை ஒட்டி வேப்பனப்பள்ளி அமைந்துள்ளதால் யானைகள் அடிக்கடி வலசை வேப்பனப்பள்ளி இப்பகுதியில் உலவி வருகிறது. நெல், கரும்பு, ராகி, வாழை தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்துவதும், விவசாயிகளை தாக்குவதும் வழக்கமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டுள்ளது.