districts

img

காந்தி பிறந்தநாளில் மக்கள் ஒற்றுமை பொதுக்கூட்டம்

‘மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை’யை வலியுறுத்தி மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்.2 அன்று தரமணியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார். மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர் சங்க மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் ரா.பாரதி, செயற்குழு உறுப்பினர்கள் ஸ்வேதா, அமர்நீதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ்குமார், செயலாளர் தீ.சந்துரு, மாநிலக்குழு உறுப்பினர் அ.ஜானகிதேவி, வேளச்சேரி பகுதிச் செயலாளர் குமரன் உள்ளிட்டோர் பேசினர்.