சென்னை,ஜூன் 1- சென்னை மக்களின் குறைகளை கேட்டு தீர்க்கும் வகையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான சனிக்கிழமையன்று (ஜூன்3) கோரிக்கை பெட்டி வைக்கப்படஉள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக நந்தனம் கோட்ட அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை பெற குறைதீர்பெட்டி வைக்கப்பட உள்ளது. வீட்டு வசதி தொடர்பான குறைகள் இருப்பின் வேலை நாட்களில் அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு வீட்டுவசதி வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.