புதுக்கோட்டை, ஜூலை 5 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் திங்க ளன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 475 மனுக்களை பொது மக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை யின் சார்பில், 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,96,500 மதிப்பி லான நிதி உதவி, உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்.