திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெண்கள், வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மனுக்கள் பெறப்பட்டது. மேலும், கைகுழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு மாவட்ட ஆட்சியர் பால் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.