விழுப்புரம், மே 24-
தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மறு சுழற்சிக்கு உத வாத பிளாஸ்டிக் பைகள், கவர்களுக்கு தடை விதித்தது. இந்நிலையில் ஓட்டல்கள், சாலையோர தள்ளுவண்டி உணவ கங்கள், காய்கறி கடை கள் பழக்கடைகளில் பிளாஸ்டிக் பை, கவர் களை பயன்படுத்தி வரு கிறார்கள். இதற்கு மூல காரணமாக செயல்படும் மொத்த பிளாஸ்டிக் பை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து விழுப்புரம் நகராட்சி துப்பு ரவு ஆய்வாளர் மதனகுமார் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் எதிரே உள்ள கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைத்தி ருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதன் உரிமையாளர் அரிதாஸ் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் விழுப்புரம் புதுவை சாலை உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையில் 300 கிலொ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வியாபாரி ரஹமத் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் செயல்களில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்க நேரிடும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இரு கடைகளிலும் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பை, கவர்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.