districts

img

சமாதான கூட்டமும் கைது நடவடிக்கையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆவேசம்

கள்ளக்குறிச்சி, பிப்.4 - கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம்,  மாத்தூர் கிராமத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை அகற்றக்கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 30 பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து, மாவட்ட வருவாய், காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கொடுத்த வாக்குறுதியை மூன்று மாதங்களை கடந்தும் அதிகாரிகள் நிறை வேற்றவில்லை. இதனால், பிப்.5 அன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீ.ஒ.மு முடிவு செய்தது. இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் பிப். 3 அன்று கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தினர். மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் கலந்து கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வி.ராஜா, மாவட்டச் செய லாளர்  வே.ஏழுமலை, மாவட்டப் பொருளாளர் பி.தெய்வீகன் மாவட்ட துணைச் செயலாளர் தங்க பாண்டியன், சிபிஎம் சின்ன சேலம் ஒன்றியச் செய லாளர் டி.மாரிமுத்து, சிஐ டியு மாவட்டப் பொருளாளர்  வீராசாமி, மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சுமதி கோவிந்தன், ரத்தினம் காமராஜ், கொளஞ்சி, பாலு, வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் ம.ஏழுமலை, தினகரன் கோவிந்தன், அசோக், மணிபாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாத்தூர் கிராமத்தில் தீண்டாமை சுவர் எழுப்பப் பட்ட இடத்தையும், தடுக்கப் பட்ட வழிப்பாதையையும் வருவாய் கோட்டாட்சியர் நேரடியாக ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்த்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். இந்த பணிகள் முடி யும் வரைக்கும் தலித் மக்கள் இதுவரை சென்று வந்த பொது பாதை யில் செல்லலாம். அது வரைக்கும் யாரும் எந்தவித மான கட்டுமானப் பணி களை செய்யக்கூடாது. தலித் மக்களுக்கு இடை யூறு செய்யக்கூடாது என்றும் அதிகாரிகள் அறி வுறுத்தினர். இதன் அடிப் படையில் பிப்.5 போராட் டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தலைவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், தீண்டாமை சுவரை உடைத்து விட்டதாக கூறி தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்ட துணைத் தலைவர் எம்.பி. மன்னன் உள்ளிட்ட பத்து பேர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மன்னன், சீனிவாசன் சபாபதி ஆகியோரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்னணி தலைவர்கள் கடும் கண்ட னம் தெரிவித்தனர்.