சென்னை, ஜூன் 28 - ராமாபுரம் ஒருங்கிணைந்த திருமலை நகர் மக்களுக்கு பட்டா வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அனைத்து கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ராமாபுரம் ஒருங்கிணைந்த திரு மலை நகருக்குட்பட்ட பகுதிகளில் அரசு ஒதுக்கீடு, மாற்று இடமாக பெற்று வாழ்ந்து வருவோருக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி திங்களன்று (ஜூன் 28) ராமாபுரம் அரசமரம் அருகே தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
என்.குணசேகரன்
ராமாபுரம் ஒருங்கிணைந்த திரு மலை நகர் குடியிருப்போர் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை தொடங்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன் பேசுகை யில், “நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்றால் பெருநிறு வனங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்க வேண்டும். அதற்கு மாறாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை வெளியேற்றுவது நியாயம் இல்லை. அரசியலமைப்புச் சட்ட பிரிவு 21ன்படி வாழ்வுரிமையை பறிக்க கூடாது. சென்னை நகரை உரு வாக்கிய உழைக்கும் மக்களை வெளி யேற்றுவது எந்த வகையில் நியா யம்? திருமலை நகர்ப்பகுதி மக்களை வெளியேற்ற எந்த முகாந்திரமும் இல்லை” என்றார்.
நாகைமாலி
இந்தப் போராட்டத்தை நிறைவு செய்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி, “ஏதோ ஒரு காலத் தில் நீர்நிலையாக இருந்திருக்க லாம். ஆவணங்களில் இருப்பதால் மட்டும் அது நீர்நிலையாகிவிடுமா? இதுவரை மீட்கப்பட்ட இடங்க ளில் நீர்நிலைகள் உருவாக்கப் பட்டுள்ளதா? நில அபகரிப்பு கும்பல், பொதுநல வழக்கு என்ற பெயரால் சுயநல வழக்கு போடு கின்றனர். நீதிமன்றங்கள் ஆவணங்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல், இதையும் கவனிக்க வேண்டும்” என்றார். “தமிழகத்தில் நடப்பது நீதிமன்ற ஆட்சியா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா என்று கேட்டேன். அதற்கு பதி லளித்த முதலமைச்சர், மாற்று இடம் கொடுக்காமல் வீடுகளை இடிக்க மாட்டோம் என்று அறிவித்தார். அடுத்த சில நாட்களில் தஞ்சாவூரில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப் புள்ள வீட்டை அதிகாரிகள் இடிக்கின் றனர். முதலமைச்சர் அறிவிப்புக் கும், அதிகாரிகள் செயல்பாட்டுக் கும் சம்பந்தம் இல்லை. முதல மைச்சரையே அதிகாரிகள் மதிப்பதில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். “உழைக்கும் மக்களுக்காக சட்ட மன்றத்தில் மட்டுமல்ல, களத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி போராடும். குடியிருப்புகளை பாதுகாக்க அனைத்து பகுதி மக்களும் தலைமை செயலகம் நோக்கி செல் வோம். நீதி கேட்போம்” என்றும் நாகை மாலி கூறினார்.
ஆர்.வேல்முருகன்
குடியிருப்பு தொடர்பான நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எதிர்த்து மறுசீராய்வு மற்றும் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று ஜூன் 16ந் தேதி முதலமைச்சரை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியதை குறிப்பிட்டு பேசிய கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், “சென்னையில் ஆடு, மாடு இல்லாத நிலையில் மேய்ச்சல் புறம்போக்கு என்ற பெயரில் நிலத்தை வைத்திருப்பது ஏன்? அந்த நிலங்களை வகை மாற்றம் செய்யவேண்டமா? சென்னை மக்களை பகுதி பகுதியாக பிரித்து ஆட்சியாளர்கள் குடியிருப் புகளை அகற்ற முயற்சிக்கின்றனர். இதற்கெதிராக ஒன்றுபட வேண்டும்” என்றார். இந்த போராட்டத்திற்கு திருமலை நகர் வீட்டு உரிமையாளர்கள் பொது நலச்சங்கத்தின் தலைவர் இ.ரவி வரவேற்றார். போராட்ட ஒருங்கி ணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பெரியார் சாலை குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எஸ்.டேவிட் நன்றி கூறினார். முன்னாள் அமைச்சர் ப.பெஞ்சமின் (அதிமுக), சி.பி.சந்தர் (விசிக), எம்.ஜி.மோகன் (காங்கிரஸ்), எஸ்.குமார், வி.தாமஸ் (சிபிஎம்), ஏ.பாசில் (மநீம) உள்ளிட்டோர் பேசினர். பெரியார் சாலை குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் எஸ்.டேவிட் உள்ளிட்டோர் பேசினர்.