districts

img

ஊத்தங்கரை வட்டம் கல்லாவி ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா

ஊத்தங்கரை வட்டம் கல்லாவி ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா, அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் நாகராஜ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இருதயராஜ், வட்டச் செயலாளர் மகாலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, இளவரசன், வட்டக் குழு உறுப்பினர்கள் தர்மன், பாஞ்சாலராசன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.