வேலூர், அக். 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேர்ணாம்பட்டு- குடியாத்தம் தெற்கு வட்ட 3வது மாநாடு மேல்செட்டிகுப்பம் ஊராட்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு எம்.பஞ்சாட்சரம், பி.வசந்தி, ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். செங்கொடியை மூத்த உறுப்பினர் சி.எம்.நடராஜன் ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தாலுகா செயலாளர் சி.சரவணன் வேலை அறிக்கையையும், தாலுகா குழு உறுப்பினர் சி.என்.ராம்குமார் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.இந்துமதி மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.சீனிவாசன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் விரிவாக்கம் பணியை உடனே துவங்கிட வேண்டும், பேர்ணாம்பட்டு சுற்றி உள்ள பல்வேறு தோல் கழிவு தொழிற்சாலைகளால் ஏற்படும் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த வேண்டும், பேர்ணாம்பட்டு பகுதியில் கலைக்கல்லூரி உருவாக்க வேண்டும், குடியாத்தம் 36-வார்ட்டில் சேரும் குப்பை கழிவுகளை செட்டிகுப்பம் ஊராட்சி பகுதியில் கொட்டுவதால் குடிநீர் விவசாயம் பாதிக்கும் ஆபத்து உள்ளது. எனவே குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டக்குழுதேர்வு 9 பேர் கொண்ட பேர்ணாம்பட்டு- குடியாத்தம் தெற்கு வட்டக் குழுவின் செயலாளராக சி.சரவணன் தேர்வு செய்யப்பட்டார்.