districts

பறக்கும் ரயிலை சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்க பயணிகள் கோரிக்கை

சென்னை, ஜூன் 3-

    சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே 4-வது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.  இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால் ஜூலை 1-ந்தேதி முதல் 2024 ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.

    இதனால் வேளச்சேரியில் இருந்து வரும் பறக்கும் ரயில்கள் சேப்பாக்கத்தில் நிறுத்தப்படுகின்றன. சேப்பாக்கம்-வேளச்சேரி இடையே திருத்தி அமைக்கப்பட்ட ரயில் அட்டவணை விரை வில் வெளியிடப்பட உள்ளது. எனவே பயணி களின் வசதிக்காக சேப்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் மாநகர பேருந்துகளை சேப்பாக்கத்திற்கு திருப்பி விடுவது கடினம் என்று கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "பறக்கும் ரயில்களை சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்குவது தொடர்பாக பரிசீலித்தோம். ஆனால் சிந்தாதிரிப்பேட்டைக்கு ரயில்களை இயக்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன" என்றார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கழகம் அடுத்த வாரம் ஆலோசனை கூட்டத்தை கூட்டி யுள்ளது. இதில் ஆலோசனை செய்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதற்கிடையே சேப்பாக்கத்தில் பறக்கும் ரயில் நிறுத்தப்பட்டால் மெட்ரோ ரயில் நிலையத்தை போல ஷேர் ஆட்டோக்கள் அல்லது பைக் டாக்சிகளை இயக்க வேண்டும் என்று ரயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.