பொள்ளாச்சி, டிச.14- பொள்ளாச்சி நகராட்சிக் குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவ ருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வா கத்தின் கவனக்குறைவே இதற்கு காரணம் என்று பெற்றோர்கள் குற்றஞ்சாட் டினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, நேதாஜி சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600க்கும் மேற் பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின் றனர். இந்நிலையில், கடந்த சனியன்று மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பள் ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவி கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதன்பின், பள்ளி அறைகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு நகராட்சி ஊழியர் களால் சுத்தம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் சில மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர்களது பெற்றோர்கள் செவ்வாயன்று பள்ளியின் தலைமையாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கல்வி அதிகாரி ராஜசேகரன், பெற்றோர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இப்பள்ளி பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகும். இப்பள்ளியில் அனைத்து மாணவிகளுக் கும் வெப்பமானி அளவு முடிவுகளை முறை யாக சரி பார்த்து அதனை சுகாதார பிரி விற்கு தகவல் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். தனிமனித இடைவெளி மற்றும் அரசு வழிகாட்டுதல் குறித்து பள்ளி நிர்வாகம் எவ்வாறு கடைபிடிக்கிறது என்பனதை கண்காணிக்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளின் மீது சுகாதாரத்துறை தனி கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் முறையாக கண் காணிக்கப்படவில்லை. ஆகவே, பொள் ளாச்சி நகராட்சியின் கவனக்குறைவால் அரசு பள்ளியில் மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டி னர்.