அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ‘பண்டிக்கால கடை’களை அமைக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை நியாயவிலை கடைகளில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமையன்று (நவ.4) சைதாப்பேட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, பொருளாளர் ஜெ.ஜூலியட் உள்ளிட்டோர் இதில் பேசினர்.