பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்திற்கு கீழே, மறைமலை அடிகள் பள்ளிக்கு எதிரே இந்திரா காந்தி சாலைக்கு வாகனங்கள் செல்ல முடியாத வகையில் காவல்துறையினர் தடுப்புகளை வைத்திருந்தனர். இந்த தடுப்புகளை அகற்றவும், நெரிசல் நேரங்களில் பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றவும் கோரி 2022ம் ஆண்டு மார்ச் மாதம் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி, அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் மனு அளித்தது. அதனை தொடர்ந்து மே மாதம் பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர் தடுப்புகளை அகற்றவும், பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதனை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. இதனையடுத்து நவம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கட்சி மறியல் நடத்தியது. இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக தற்போது இந்திரா காந்தி செல்ல தடையாக இருந்த தடுப்புகளை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.