சென்னை, பிப். 27- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் 45 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் பபாசி தலைவர் எஸ். வயிரவன், துணைத் தலைவர் பெ. மயிலவேலன் ஆகியோர் தலைமையில் ஓவியப் போட்டி ஞாயிறன்று (பிப். 27) நடைபெற்றது. போட்டியில் பங்கேற்று மாணவர்களால் வரை யப்பட்ட ஓவியங்க ளில் இருந்து தேர்ந்தேடுக்கப்ப டும் சிறந்த ஓவியங்களுக்கு கண்காட்சியின் நிறைவு நாளில் நீதிபதி ஆர்.மகா தேவன் அவர்கள் பரிசு வழங்கிப் பாராட்டுகிறார். இதில் சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, திரு வள்ளூர் மாவட்டங்க ளில் இருந்து ஏராள மான மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.