அண்மையில் மறைந்த ஓவியர் நெடுஞ்செழியன் என்கிற செழியன் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி சென்னை ஆதம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் செவ்வாயன்று (ஏப்.19) நடைபெற்றது. குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மகாலிங்கம் உருவப்படத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓவியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், செழியனின் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.