மீஞ்சூர், மே 3 அதானியின் எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றி வரும் தொழி லாளர்கள் மீது, அதிமுக ஆட்சி காலத்தில் போடப் பட்டுள்ள பொய் வழக்கு களை, திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தி யுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில் புதன் கிழமை (மே 1) நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் அவர்பேசியதாவது: விலைவாசி உயர்வு எப்போதும் இல்லாத அளவிற்கு மோடி ஆட்சியில் 60 விழுக்காட்டிற்கு மே லாக உயர்ந்து விட்டது. அதற்கு ஏற்ப சம்பளம் உயரவில்லை. இதில் சத்தான உணவு எப்படி சாப் பிட முடியும். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அரசாங்கம் தான் மோடியின் பாஜக அரசாங்கம். ஒவ்வொரு குடும்பமும் மோடியின் திட்டங்க ளாலும், சட்டங்களாலும், வரி கொடுமைகளாலும், பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான் மோடிக்கு எதிராகவும் பாஜகவிற்கு எதிராகவும் இந்தியா முழுவதும் அலை வீசிக் கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக, ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். நமது இந்திய அரசியல மைப்பு சாசனம் நம்மை யெல்லாம் வழி நடத்துகிறது. இதனை பாதுகாக்க வேண்டும். மதச்சார் பின்மை, ஜனநாயகம், சோசலிசம் உள்ளிட்ட கோட்பாடுகளை கொண்டது தான் நமது அரசியல் சாசனம். இதற்கு நேர் எதிராக கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்தது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சாசனத்தை மாற்றி விடுவார்கள். சனாதானத்தை அமல்படுத் தக்கூடிய ஒரு புதிய சாசனத்தை உருவாக்கு வார்கள். நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையில் உள்ள ஒரு நாட்டில் அதைப் பற்றி கடுகளவும் கவலைப் படாத கூட்டம் தான் பாஜக ஆர்எஸ்எஸ் கூட்டம். இந்த கூட்டத்தை தேசத்தை விட்டு அகற்ற வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். அதானியின் எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் தொழி லாளர்கள், தங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்கின்ற ஒரு குறைந்தபட்ச கோரிக் கையை வைத்துள்ளனர். இதற்காக 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அடையாள அட்டை கேட்ட தற்காக 165 தொழிலாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்து வைத்தனர். இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தொழிலாளர்களின் நலன் பாதுகாப்படும் என்று உத்தரவாதம் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதிமுக ஆட்சி காலத் தில் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை திரும் பப்பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு சண்முகம் பேசினார். முன்னதாக பொதுக் கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜி.வினாயகமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் ஏஐடியுசி தேசிய செயற்குழு உறுப்பினர் சி.ஸ்ரீகுமார், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாவட்ட துணைச் செயலாளர் பி.கதிர்வேல், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி கள் குருமூர்த்தி, எஸ்.மயில்வாகனன், ஜெ.அருள், ஜி.பாலன் ஆகியோர் பேசி னர். சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் இ.ஜெயவேல் நன்றி கூறினார். முன்னதாக நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் தவறான கொள்கைக்கு எதிராக முழக்கமிட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமைகளை மாநில அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.