ராணிப்பேட்டை, மே 2 - அரக்கோணத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று மே தின பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் பி.டில்லிபாபு அரசுக்கு கோரிக்கை விடுத்தார். ராணிப்பேட்டை மாவட்டம், பழனிப்பேட்டையில் மே தின பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.வெங்கடேசன் தலைமையில் திங்களன்று (மே 1) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பி.டில்லிபாபு பேசுகை யில், “தமிழ்நாட்டில் தலித் மற்றும் பழங்குடி மக்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார். கேரள இடது முன்னணி அரசை போல், தமிழ்நாட்டிலும் தலித், பழங்குடி மக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும். தமிழ கத்தில் 100 நாள் வேலைக்கான கூலியை பிற மாநிலங்களைப் போல் உயர்த்தி வழங்க வேண்டும். பழங்குடி மக்களுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக 30 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்றார். அரக்கோணத்தில் தொழிற்பேட்டை அமைத்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆ.தவராஜ், பொருளாளர் என்.ரமேஷ், துணைத் தலைவர் என்.காசிநாதன், துணைச் செயலாளர் எம்.சீனிவாசன், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, வி.அமிர்தவள்ளி (அங்கன்வாடி ஊழியர் சங்கம்), ம.கோவலன் (வாலி பர் சங்கம்), சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ரபீக் அகமது ஆகியோர் பேசினர்.