திருவள்ளூர், அக் 19- விவசாயிகளின் அனுமதி யின்றி ஒரு செண்ட் நிலத்தை கூட எடுக்க அனு மதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு, செங்காத்தாகுளம், எர்ணாங்குப்பம், வெங்கல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 1700 ஏக்கர் பரப்பளவில் முப்போகம் விளையக் கூடிய, விவ சாய நிலங்களை சட்ட விரோதமாக கையகப் படுத்தும் முயற்சியை கை விட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (அக் 19), மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்ட பொருளாளர் சி.பெருமாள், மாவட்ட துணைத் தலை வர் பி.ரவி (ஒன்றிய கவுன்சி லர்), மாவட்ட துணைச் செயலாளர் எம்.ரவிக்குமார் (ஒன்றிய கவுன்சிலர்), வட்டார நிர்வாகிகள் டி.விஸ்வநாதன், வி.வாசு தேவன், எம்.திருப்பதி, உட்பட்ட பலர் பேசினர் சங்கத்தின் மாநில தலை வர் பெ.சண்முகம் பேசுகை யில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்ட விவசாயிகளுக்கு சொந்த மான 1700க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் அறிவுசார் நகரம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அறி வித்துள்ளது. இந்த நிலம் முழுவதும் நல்ல நெல், சிறுதானியங்கள் விளையக்கூடிய வளமான நிலமாகும். இந்த நிலத்தை கையகப்படுத்தி அறிவு சார் என்ற பெயரில் தொழிற் பேட்டை அமைப்பதும்,
கட்டு மானப் பணிகளை துவக்கு வதும் உணவு பாது காப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள நஞ்சை நிலங்களில் இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதை தமிழ் நாடு அரசு கைவிட வேண் டும். விவசாயிகள் சம்மதம் இல்லா மல் நிலத்தை கையகப் படுத்த மாட்டோம் என்று 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக விவசாயிகளுக்கு வாக்கு றுதி அளித்தது. கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக இப்போது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விவ சாயிகளின் சம்மதம் இல்லாமலே அத்து மீறி நிலத்திற்குள் நுழைந்து, நிலத்தை அளவீடு செய்யும் நடவடிக்கையில் ஈடு படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. இத்தகைய திட்டத்திற்கு நிலத்தை கொடுப்பதற்கு விவசாயிகள் சம்மதிக் கிறார்களா, இல்லையா என்பதை குறித்து கருத்து கேட்பு கூட்டத்தை கூட மாவட்ட நிர்வாகம் நடத்த வில்லை. தன்னிச்சையாக நிலத்தை கையகப்படுதும் எந்த வித அதிகாரமும் தமிழ்நாடு அரசிற்கு கிடை யாது. தமிழ்நாடு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்திற்கு விரோதமாக நடப்பதை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. விவசாயி களின் சம்மதமில்லாமல் ஒரு செண்ட் நிலத்தை எடுப்பதற்கு கூட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனு மதிக்காது என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.