districts

புறநகர்ப் பகுதியில் 2500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைப்பு

தாம்பரம், ஜன. 9 - சென்னை மற்றும் புறநகர் பகுதி ்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் அதி களவு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் கொரோனா சிகிச்சை மையங்களை அமைத்து வருகிறது. தாம்ப ரம் சானடோரியம், காசநோய் மருத்து வமனையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப் ்பட்டுள்ளது. இந்த மையத்தை  செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பரணி தரன், காசநோய் மருத்துவமனை கண் காணிப்பாளர்  ஸ்ரீதர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கைகள், சேலை யூர் பாரத் கல்லூரியில் 250 படுக்கைகள், தையூர் அரசு மருத்துவமனையில் 1000 படுக்கைகள், எஸ்.ஆர்.எம் மருத்து வமனையில் 600 படுக்கைகள் தயாராக உள்ள தாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.