districts

வீட்டுமனைப் பட்டா கோரிக்கை கள ஆய்வுக்கு உத்தரவு

ராணிப்பேட்டை, ஜூலை 9 –  

     ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டாட்சியர் அலுவல கத்தில் வட்டாட்சியர் ஆனந்தன் தலை மையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாண்டிய நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் கல்யாணி, விவசாயிகள் சங்கம் வட்டார தலைவர் ஜெய்சங்கர், செய லாளர் தாமோதரன், பொருளாளர் விஸ்வநாதன், நிலவு குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

   சோளிங்கர் அடுத்த பாண்டிய நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காமதேனு நகரில் சுமார்  20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் குடும்பங்கள் வேலூர், ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகம் மற்றும் வாலாஜா, சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் தொடர்ந்து வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்து வந்த நிலையில், வட்டாட்சியர் ஆனந்தனிடம் முறை யிட்டனர்.

   இதனையடுத்து. வட்டாட்சியர் நேரில் சென்று கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.