மூன்று குற்றவியல் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் ஆழ்வார், ஜெ. சிலம்புச் செல்வன், உமா சங்கர், ரமேஷ், ஆண்டனி பவுல்ராஜ், ஜானகி, கண்ணன், வழக்கறிஞர்கள் மணிவண்ணன், தயாநிதி, டைட்டஸ் காமராஜ், ராஜவேல், பீமாராவ், வைத்தியலிங்கம், திலீபன், பிரகாஷ், நிர்மல் ராஜ், சிலம்பரசன், முஷாரப் ஆகியோர் பங்கேற்றனர்.