districts

img

தொழிலாளர் விரோத மசோதாவுக்கு எதிர்ப்பு...

தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை வரையறையின்றி உயர்த்தும் தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை கண்டித்து சனிக்கிழமையன்று (ஏப்.22) மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாவட்டச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் பார்த்திபன், ஆ.பிரியதர்ஷினி எம்.சி. உள்ளிட்டேர் கலந்து கொண்டனர்.