districts

சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் தண்ணீர் திறப்பு

செங்குன்றம்,ஏப்.18- சென்னை நகர மக்க ளின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் சோழவரம் ஏரியில் இருந்து புழலுக்கு 224 கனஅடி தண்ணீர் திறக்கப்பட் டுள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081  மி. கனஅடி ஆகும். இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்படு அங்கி ருந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி யதையடுத்து தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த மாதம்  20-ந்தேதி முதல் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப் பட்டது. ஏரியில் உள்ள 9  ஷட்டர்களில் 3 ஷட்டர்கள்  திறக்கப்பட்டு பேபி கால் வாய் மூலம் தண்ணீர் சென்றுகொண்டு இருக்கி றது. திங்களன்று சோழ வரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 224 கனஅடி தண்ணீர் சென்றுகொண்டு இருக்கிறது. இதுவரை 0.44 டி.எம்.சி. தண்ணீர் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது குடிநீர் ஏரிக ளில் உள்ள தண்ணீரை வைத்து சென்னையில் இந்த ஆண்டு முழுவதும் தட்டுப் பாடு இன்றி குடிநீர் விநி யோகிக்க முடியும் என்று  அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.