புதுச்சேரி, மே 6- மாமேதை காரல் மார்க்ஸின் 204ஆவது பிறந்த நாளையொட்டி ‘காரல் மார்க்ஸ் நூலகம்’ திறப்பு விழா பாகூர் சரஸ்வதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கொம்யூன் செயலாளர் ப.சரவணன் தலைமை தாங்கினார். நூலகத்தை பிரதேச செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் திறந்து வைத்தார். முன்னதாக மூத்த உறுப்பினர் கலியபெருமாள் செங்கொடியை ஏற்றினார். பின்னர் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் திறந்து வைத்தார். இதில் செயற் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பிரதேச குழு உறுப்பினர்கள் கலி யன்,இளவரசி, கொம்யூன் குழு உறுப்பினர்கள் வடிவேலு, சண்முகம், ஹரி தாஸ், கிளைச் செயலாளர் கள் வளர்மதி, முருகையன், பூங்காவனம், சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகத்தில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பல்வேறு பொது தக வல்களை தெரிந்து கொள்ளும் வகையில் அன்றாட செய்தித்தாள்கள், உயர்கல்வி பயில உதவக்கூடிய புத்தகங்கள், வேலைவாய்ப்பு பயிற்சி தேர்வு புத்தகங்கள், வரலாறு, அறிவியல், கலை இலக்கியம் போன்ற நூற்றுக்கணக்கான புத்த கங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.