புதுச்சேரி, மே 30- கோடை வெப்பம் அதிகரிப்பால் புதுச்சேரியில் ஜூன் 7இல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதுகுறித்து செவ்வாயன்று (மே30) செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கோடை வெயிலின் தாக்கத்தால் புதுவையில் அரசு பள்ளிகளின் முழு ஆண்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டது. முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தி விடுமுறை அறி விக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறி விக்கப்பட்டிருந் தது. தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக விடு முறை ஒரு வாரம் கூடுதலாக நீட்டிக்கப் பட்டுள்ளது. அதேபோல் புதுவை யிலும் பள்ளி விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து பள்ளி விடுமுறை ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப் படும். புதுவை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு விதி முறைகளை தளர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். இதை யேற்று புதுவையில் உள்ள 127 அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளுக்கு பாடபுத்தகம் அனுப்பி வைத்துள்ளோம். புதுவைக்கு ஒரு பகுதி புத்தகம் வந்துள்ளது. பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் விநியோகிக்கப்படும்.
ஏற்கெனவே இலவச சீருடை, சைக்கிள் ஆகியவற்றை அரசு வழங்கி வருகிறது. ஒன்றரை மாதத்திற்குள் லேப்டாப் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு, தனியார் பள்ளிகள் சேர்த்து 181 பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு விண்ணப்பித்தோம். இதில் முழுமை யாக 127 அரசு பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அனுமதி கிடைத்துள்ளது. தனியார் பள்ளிகள் குறித்து அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத்தில் தமிழ் விருப்ப பாடமாகத்தான் இருக்கும். தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்கும். ஆரம்ப பள்ளிக்கு 146 ஆசி ரியர்களை தேர்வு செய்ய உள்ளோம். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதா? தேர்வு நடத்தி தேர்வு செய்வதா? என அமைச்சரவையில் முடிவு செய்யப்படும். பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக பெற்றோர்கள், மாணவர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். மதிய உணவு வழங்கும் நிறுவனத்துடன் குறிப்பிட்ட சில ஆண்டுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதை நிறுத்துவதால் சட்ட சிக்கல் வருமா? என ஆலோசித்து வருகிறோம். முட்டை, சிறுதானிய உணவு வழங்க அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் மாண வர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும். ஏற்கனவே காலையில் பால் வழங்கி வரு கிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த சந்திப்பின் போது கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.