சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பொன்னம்பலம் நகரில், கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ 26 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட பூங்கா மற்றும் அதன் அருகிலேயே 29-வது வார்டில் ரூ 20 லட்சம் செலவில் நடைபாதை வசதிகளுடன்அமைக்கப்பட்ட காரைக்குட்டை குளத்தை நகர் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இவருடன் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் மல்லிகா, மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், மணிகண்டன், வெங்கடேசன், அப்புசந்திரசேகர். கவுன்சிலர்கள் கோமதிசேகர், சுனிதா மாரியப்பன் மற்றும் திமுக நகர துணைசெயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.