புதுச்சேரி, அக்.27- சென்னையின் பன்னோக்கு மருத்துவ மனையான க்ளெனீகிள்ஸ் ஹெல்த் சிட்டி புதுச்சேரியில் அமைத்துள்ள முதல் பிராந்திய தகவல் மையத்தை அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த மையத்தில் வெளி நோயாளி களுக்கு சென்னை க்ளெனீகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கு வார்கள். இந்த தகவல் மையம், புதுச்சேரி, கொசப்பாளையம், லெனின் தெருவில் உள்ள துளசி மருத்துவ மையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ தகவல் மற்றும் நோய் சம்பந்தமாக உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த மையம் துளசி மருத்துவ மையத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. மேலும் இங்கு வரும் நோயாளிகள் பல்வேறு மருத்துவ நிபுணர்க ளுடன் ஆலோசனைகளை பெறலாம். இந்த மையத்தில் இதய நோய், புற்றுநோய், நரம்பியல், இண்டர் வென்ஷனல் ரேடியாலஜி, கணையம், கல்லீரல் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட நோய்கள் தொடர்பான சிகிச்சை முறை கள் குறித்து வெளி நோயாளிகள் ஆலோ சனைகள் பெற்று பயன் அடையலாம் என்று மருத்துவமனையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.