districts

img

நேரடி உரம் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவள்ளூர், மார்ச் 12- கும்மிடிப்பூண்டியில் கோரமண்டல் நமது குரோமோர் என்கிற விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்து நேரடி கொள்முதல் நிலையம் முருகன் செவ்வாயன்று (மார்ச் 12), திறக்கப்பட்டது. நமது குரோமோர் நிறுவன விற்பனை பிரிவு துணைத் தலைவர் ஜி.பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செயற் பாட்டு தலைவர் நவீன் ரெட்டி,  முதுநிலை மண்டல மேலா ளர் ரகுவீர ரெட்டி முன்னிலை  வகித்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு  அழைப்பாளராக திருவள் ளூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் முருகன் பங்கேற்று  நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயி களுக்கு விவசாய இடு பொருட்களை வழங்கினார். விற்பனை பிரிவு துணை தலைவர் ஜி.பாபு, கும்மிடிப் பூண்டி சிறுகுரு வேளாண் விவசாயிகள் சங்க தலை வர் கிருஷ்ணன், செயலா ளர் சுகுமார், பொருளாளர் வேலாயுதம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கோரமண்டல் நமது குரோமோர் நேரடி கொள்முதல் நிலையத்தில் தமிழக அரசின் மானிய விலையில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்கப்ப படும் நிலையில், விவசாயி களுக்கு பொருட்களை அவர்கள் பகுதிக்கே கொண்டு செல்லவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.