districts

img

திருவொற்றியூர் 4ஆவது வார்டில் சிறுவர் பூங்கா திறப்பு

சென்னை, பிப். 15- திருவொற்றியூர் 4ஆவது  வார்டில் சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்ட லத்திற்குட்பட்ட 4ஆவது வார்டு ராமநாதபுரத்தில் சிறுவர்களுக்காக விளை யாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்க வேண்டும் என்றும், முருகப்பா குளம் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி  மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மாமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதேபோல் மின் விளக்கு கள் அமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரண்டு பணிகளும் முடிவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா புதனன்று (பிப். 14) மாமன்ற  உறுப்பினர் ஆர்.ஜெயரா மன் தலைமையில் நடை பெற்றது. திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மின் விளக்கு களை இயக்கி வைத்து, சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். இதில் மண்டல அலுவ லர் நவீந்திரன், செயற் பொறியாளர் முருகவேல்,  மின்வாரிய செயற்பொறி யாளர் இம்தியாஸ், உதவி பொறியாளர் ஜெயக்குமார், கூடுதல் பிரிவு பொறியாளர் கண்ணன், உதவி பொறி யாளர் அன்னலட்சுமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதி செயலாளர் எஸ்.கதிர் வேல், பகுதிக்குழு உறுப் பினர்கள் அலமேலு, வெங்கடையா, கிளைச் செயலாளர் குமார், திமுக வட்டச் செயலாளர் பவுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.