திருவண்ணாமலை, அக்.27- திருவண்ணாமலை நகராட்சி தாமரை குளம் அருகில் சலவைத் தொழிலாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.23 லட்சம் மதிப்பில் அதிநவீன இயந்திரங்களுடன் கூடிய புதிய கட்டிடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரியம் இரா.ஸ்ரீதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.