திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோக மாக நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத் தது. அதன் பெயரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செஞ்சி சாலை அருகே சந்தே கத்திற்கிட மான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த வாலி பரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளையும் சோதனை செய்தனர். அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை யடுத்து அவரை கைது செய்தனர்.