districts

img

பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து ஒருவர் பலி

சென்னை,செப்,29-  கனமழை, பலத்த காற்று வீசியதால் சென்னை சைதாப்பேட்டை யில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்  மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.   சென்னையின் பல்வேறு பகுதி களில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது.  இந்நிலையில், சைதாப்பேட்டை  கிழக்கு ஜோன்ஸ் ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கியிருந்த பலரும் பெட்ரோல்  போட வந்தவர்களும் படுகாயமடைந் தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய வர்களை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்டனர்.  அவர்களில் கந்தசாமி வயது 30 உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 7 பேருக்கு ராயப்பேட்டை அரசு மருத்து வமனையில் சிகிச்சை அளிக்கப்படு கிறது. இடிபாடுகளில் மேலும் சிலர் இருக்கக்கூடும் என்பதால் தீய ணைப்புத் துறையினர் தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், இந்த விபத்தில் இருசக்கர வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.