‘போதையற்ற தமிழ்நாடு’ எனும் முழக்கத்தை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக மத்தியசென்னை மாவட்டம், வில்லிவாக்கம் பகுதி அயனாவரம் மார்க்கெட்டில், சங்கத்தின் பகுதி பொருளாளர் டேவிட் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அ.பிரியதர்ஷினி எம்.சி., மாவட்டத் துணைத் தலைவர் யூஜின், செயற்குழு உறுப்பினர் லொ,விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.