இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பூண்டி பகுதி குழு சார்பாக போதை பழக்கத்திற்கு எதிரான ஒரு கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் பெறுவது என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக பூண்டி பகுதிக்கு உட்பட்ட மெய்யூரில் ஞாயிறன்று தொடக்க விழா நடைபெற்றது . இதில் வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கே. விஜயகாந்த், பொருளாளர் பிரபு, துணைச் செயலாளர் கார்த்திக், துணைத் தலைவர் வில்சன் பகுதிக்குழு உறுப்பினர்கள் சினேகா, நதியா மெய்யூர் கிளைச் செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் சஞ்சய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மெய்யூர் கிராமத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.