districts

தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்கலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப். 3 - மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை  பணிக்கான டெண்டருக்கு நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி கோரியுள்ள கடிதம்  மீது பிப்.4ம் தேதிககுள் முடிவெடுக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணை யத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது 2011ஆம் ஆண்டு சென்னை மாநக ராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை வசதி ஏற்ப டுத்தப்படவில்லை என்று அய்யம்பெருமாள் என்பவர் 2019ல் பொது நல வழக்கு தாக்கல்  செய்திருந்தார். அதில், அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் (செப்டிக் டேங்கு)  நிரம்பி சாலைகளில் வடிவதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. பாதாள சாக்கடை  அமைப்பது தொடர்பாக அனுப்பிய மனு மீது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுக்க காலக்கெடு நிர்ணயித்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார். இந்த வழக்கில், மடிப்பாக்கம் பகுதியில்  160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக் கடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார்  நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளது.

திட்ட அறிக்கை கிடைத்ததும், நிதி  ஒதுக்கப்பட்டு பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கும் என வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்படி பணிகள் முடிக்கப்படவில்லை என கடந்த ஆண்டு அய்யம்பெருமாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்கு நர் மற்றும் செயற் பொறியாளர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இதன்படி, புதனன்று (பிப்.2) நடைபெற்ற விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராகி, பணிக்கான ஒப்பந்தம் விட அனுமதி கோரி  மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர். இதனை யேற்றுக் கொண்ட நீதிபதிகள், பிப்.4ம்  தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் முடி வெடுக்க வேண்டும். அனுமதி கிடைத்த  10 நாட்களுக்குள் ஒப்பந்த நடவடிக்கை களை முடிக்க வேண்டும். அடுத்த விசார ணையின்போது அதிகாரிகள் ஆஜராக விலக்களித்து என உத்தரவிட்டனர்.