நாடக கலைஞர் சப்தர் ஹஷ்மி நினைவு தினத்தையொட்டி திங்களன்று (ஜன.1) சென்னை எம்ஜிஆர் நகர் பகுதி, சூளைப்பள்ளத்தில் சென்னை கலைக்குழுவின் ‘அம்மா’, ‘நல்வழி’ வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கவிஞர் இந்திரன், நாடகவியலாளர் பிரளயன், பேரா. அ.மங்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி உள்ளிட்டோர் பேசினர்.