districts

img

பகத்சிங் நினைவு நாளையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நினைவு அஞ்சலி கூட்டம்

பகத்சிங் நினைவு நாளையொட்டி திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன் எஸ்.ராமதாஸ், மாவட்டக் குழு உறுப்பினர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீரவணக்க நினைவஞ்சலிக் கூட்டம் வியாழனன்று (மார்ச். 23)  நடைபெற்றது இதில் மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி, திருநாவலூர் ஒன்றியச் செயலாளர் ரகு, தலைவர் தங்கமணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வாலாஜா சீனிவாசன் பேட்டையில் கிளைச் செயலாளர் கார்த்திக் தலைமையில் மாவீரன் பகத்சிங் வீரவணக்கம் நினைவு அஞ்சலி கூட்டம் வியாழனன்று (மார்ச். 23)  நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ம.கோவலன், பொருளாளர் அ.கலைவாணன், தாலுகா தலைவர் ம.ஜெயகாந்தன், இணைச் செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் செந்தில், பிரேம்குமார், சூரியராஜன், அஜித், மணி, விஷ்வா, நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.