திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று (பிப் 26) மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற 2022-23ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் திறனறித் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.15ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார்.